02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
சக்தி சக்திதாசன்
ஞாலத்தின் மீதொரு
பவனி வந்து – அதன்
கோலத்தை பார்த்ததொரு
வியப்பன்றோ !
காலத்தின் சூட்சுமங்கள்
புரியாமல் மூலத்தைத்
தொலைத்து விட்ட வேகங்கள்
சூழலின் மாற்றங்கள்
புரியவில்லை – ஏனோ
சுழலுகின்ற காரணமும்
தெரியவில்லை
பகடைக் காய்களாக
நாமே அவனியில்
பவனி வருகின்றோம்
பெருமையுடன்
சிந்துகின்ற மணித்துளிகள்
எல்லாம் – கூறும்
சிந்தை மிகு விளக்கமொன்று
காண்பீர் உலகினிலே
முந்தி விழுகின்ற
துளிகளும் கூட
முடிகின்ற இடம்
அதே தரைதானே !
எண்ணி, எண்ணிப்
பார்க்கின்ற வேளையிலே – என்
எண்ணங்களில் பூத்து
நிற்கும் நினைவு ஒன்று
என்ன, என்ன செய்தாலும்
அது எல்லாம்
எனதென்ற எண்ணம்
வெறும் பொய்யே !
உள்ளமெங்கும் பூத்து
மணம் வீசும் – அந்த
உண்மையான உணர்வு
அன்பு ஒன்றே
உணர்ந்து கொள்ளும் போது
நெஞ்சில் அழியாமலே
உதிக்கும் அழியா
உண்மையான தெளிவு
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...