புரிய முயலாதே 2
-
By
- 0 comments
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
ஜெயம் தங்கராஜா
சசிச
மொழி
அடையாளம் ஒன்றை இனத்திற்குத் தருவது
படைத்திடப் படைத்திட ஊறியே வருவது
உடைமை இதுவெனவாகி உயிராகவே மாறுவது
தடையின்றியே அறிவை அள்ளியள்ளித் தருவது
பெற்றவளை அம்மாவென அழைக்க எழிலாவது
கற்பனைகள் கொப்பளிக்க வார்த்த்தைகளாய் விழுவது
சிற்றறிவை பேரறிவாக்கி தத்துவங்களாய்ப் பேசவைப்பது
கற்றுவிடக் கற்றுவிட பண்டிதனாய் ஆக்குவது
சிந்திக்க வைப்பதென்பதும் மொழியின் வல்லமையே
சொந்த புத்தியைத் தருவதும் இதனாளுமையே
ஐந்தறிவிலிருந்து ஆறறிவோரை வேறுபடுத்திக் காட்டுவதுமிதே
சந்தத்துடன் எழுதவும் பேசவும் பரிசானதே
இலக்கணமும் இலக்கியமும் இதற்குள்ளே அடங்கும்
உலகம் இதில் ஏழாயிரத்தை அடக்கும்
இலகுவாக நாவினால் உருவாகிடும் ஒன்று
அழகான சொற்களாக பிரசவிக்கும் நன்று
இது அமுதானது தேனானது சுவையானது
அதுவே நிறைவானது மறையானது இறையானது
முதுமை மொழியைக் கொண்டவர்க்கோர் பெருமையே
புதுமைத் திறனும் மொழியினுடைய அருமையே
ஜெயம்
28-02-2023
https://linksharing.samsungcloud.com/hHqNBNF3NdHE
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments