பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-02.03.2023
கவி இலக்கம்-1650
வாழ்ந்த சுவடுகள்
—————————
எம்மோடு வாழ்ந்த சுவடுகள்
ஒரு நாள் முதுமை அடைவது உண்மை
முதுமை அடைவது இறைவன் விதி என்பது
இதுவே உயிர்களின் பொது விதியுமாகும்
எமக்கு விட்டு சென்ற சுவடுகள்
அனுபவங்கள் திறமைகள் மறக்க முடியாதவை
ஆக்கம் ஊக்கம் தந்து வழிகாட்டியவர்கள்
வாழ்ந்து வளர்ந்து தடம் பதித்தவர்கள்
ஓடியாடி வாலிபர்களாக வளர்ந்து பெருத்து
கூனிக்குறுகி சிறு மழலையானோர்
இவையெலாம் தரை தட்டி போச்சு
படிக்கட்டில் ஏறி ஏறி தள்ளாடி இறங்கி
தடி ஒன்றை ஊன்றலாகி முக்காலாகியது
வாக்கும் மனமும் இல்லா நிலையும்
பேச்சும் நோக்கும் வழி மாறிய செயலும்
பார்வை ஒளியின் குறைந்த நிலையும்
வாழ்ந்து வளர்ந்து பல சுவடுகள் பதித்தவர்கள்
மூலையில் முடங்கி முதுமையானார்கள்
வாழ்ந்த சுவடுகள் தனிமையில் வாடுவது ஓர்மம்
பிள்ளைகள் காப்பகம் விடுவதில் ஆர்வம்
விழிமேல் வழி பார்த்து நிற்போர் ஏக்கம்
முதுமை எல்லோருக்கும் பெரும் தாக்கம்
காவோலை விழ குருத்தோலை சிரிப்பதுண்டு
நமக்கும் நாளை நடக்குமென அறியாத ஏழ்மை
வாழ்வில் தடம் பதித்த சுவடுகள் என்றும் நினைவில்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading