மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-02.03.2023
கவி இலக்கம்-1650
வாழ்ந்த சுவடுகள்
—————————
எம்மோடு வாழ்ந்த சுவடுகள்
ஒரு நாள் முதுமை அடைவது உண்மை
முதுமை அடைவது இறைவன் விதி என்பது
இதுவே உயிர்களின் பொது விதியுமாகும்
எமக்கு விட்டு சென்ற சுவடுகள்
அனுபவங்கள் திறமைகள் மறக்க முடியாதவை
ஆக்கம் ஊக்கம் தந்து வழிகாட்டியவர்கள்
வாழ்ந்து வளர்ந்து தடம் பதித்தவர்கள்
ஓடியாடி வாலிபர்களாக வளர்ந்து பெருத்து
கூனிக்குறுகி சிறு மழலையானோர்
இவையெலாம் தரை தட்டி போச்சு
படிக்கட்டில் ஏறி ஏறி தள்ளாடி இறங்கி
தடி ஒன்றை ஊன்றலாகி முக்காலாகியது
வாக்கும் மனமும் இல்லா நிலையும்
பேச்சும் நோக்கும் வழி மாறிய செயலும்
பார்வை ஒளியின் குறைந்த நிலையும்
வாழ்ந்து வளர்ந்து பல சுவடுகள் பதித்தவர்கள்
மூலையில் முடங்கி முதுமையானார்கள்
வாழ்ந்த சுவடுகள் தனிமையில் வாடுவது ஓர்மம்
பிள்ளைகள் காப்பகம் விடுவதில் ஆர்வம்
விழிமேல் வழி பார்த்து நிற்போர் ஏக்கம்
முதுமை எல்லோருக்கும் பெரும் தாக்கம்
காவோலை விழ குருத்தோலை சிரிப்பதுண்டு
நமக்கும் நாளை நடக்குமென அறியாத ஏழ்மை
வாழ்வில் தடம் பதித்த சுவடுகள் என்றும் நினைவில்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading