பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி -99

தலைப்பு – நிமிர்வின் சுவடுகள்

காலங்கள் ஓடும் கவலைகள் தீராது
கதைகள் பல கேட்டும் சீராகாது
கணத்த இதயங்களின் தலையணை ஈரமாகுது
தென்றல் வீசினாலும் தேய்கின்ற நிலவானது.

தளர்ந்தது நடை தடுமாறுது கால்கள்
நடுங்குது கைகள் நடனங்களாய் வார்த்தைகள்
மனங்கள் மாறியும் மாற்றங்கள் வரவில்லை
அறிவியல் இருந்தும் ஆகாரம் ஆசையாகவில்லை.

வாடுகிறோம் நாளாந்தம் வாட்டங்கள் வட்டமானது
சாதனைகள் சுவைக்கவில்லை காவோலை கதையானது
சுவடுகள் மிஞ்சுமா சோதனைதான் மிச்சமா
சிந்தித்தாயா மானிடா நிமிர்வின் சுவடுகளை.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
02/03/2023

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading