” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி -99

தலைப்பு – நிமிர்வின் சுவடுகள்

காலங்கள் ஓடும் கவலைகள் தீராது
கதைகள் பல கேட்டும் சீராகாது
கணத்த இதயங்களின் தலையணை ஈரமாகுது
தென்றல் வீசினாலும் தேய்கின்ற நிலவானது.

தளர்ந்தது நடை தடுமாறுது கால்கள்
நடுங்குது கைகள் நடனங்களாய் வார்த்தைகள்
மனங்கள் மாறியும் மாற்றங்கள் வரவில்லை
அறிவியல் இருந்தும் ஆகாரம் ஆசையாகவில்லை.

வாடுகிறோம் நாளாந்தம் வாட்டங்கள் வட்டமானது
சாதனைகள் சுவைக்கவில்லை காவோலை கதையானது
சுவடுகள் மிஞ்சுமா சோதனைதான் மிச்சமா
சிந்தித்தாயா மானிடா நிமிர்வின் சுவடுகளை.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
02/03/2023

Nada Mohan
Author: Nada Mohan