க.குமரன் 9.3.23

வியாழன் கவி
ஆக்கம் 104

வாழ்ந்தோரை போற்றுவோம்

மதி கொண்டு
வரைந்த
விதி சொன்ன
பாதை

நிலை இன்று
விதி மாறி
தடை போகின்ற
வேளை

ஒரு வார்த்தை
பிழைத்தின்று
மறு வார்த்தையாக
மாறி

சுடு வார்த்தை
பரிமாறி
மனம் கொதிக்கின்ற
போது. !

நிதம் உண்மை
வெல்லும் என்று
நீறு பூத்து
நின்று!

கடல் வானம்
மறைகின்ற
கதிரவன் போல
இன்று!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading