மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜெயம் தங்கராஜா

https://linksharing.samsungcloud.com/zOCXxYMWgSGu
எம் நாடு

இந்து மாகடலில் மிதக்கின்ற முத்து
அத்துணை இயற்கை வளங்களின் சொத்து
சிந்தும் நீர்வீழ்ச்சி பாடிவிடும் சிந்து
அந்த நதியூரும் அழகை உற்பவித்து

என்னவொரு உலகைப் படைத்தவரின் கைவண்ணம்
எண்ணமெல்லாம் தாயகத்தின் நினைவுச் சின்னம்
அன்றங்கு வாழ்ந்த வாழ்க்கை இன்னும்
மின்னிமறையும் ஞாபகங்கள் போய்விடவே எண்ணும்

கண்களைப் பறிக்கும் கடலின் நீலம்
பொன்னிற மணலோ கரையோரம் நீளும்
விண்ணை முட்டும் மலைகளின் கோலம்
என் மண் வனப்புகளை ஆளும்

சகோதரராக கூடியே வாழ்ந்தவொரு நாடு
அகோர யுத்தத்தினூடே இன்று சுடுகாடு
மகோன்னதத்தை மங்கவே வைத்தது அடிபாடு
கைகூடி வராது இழுபறியாக உடன்பாடு

ஜெயம்
10-03-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading