நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

கீத்தா பரமானந்தம்

தீ!
ஆக்கி அவிக்கும்
ஆற்றலின் மூலம்!
தீப ஒளியாய்ச்
சுடர் விடும் ஞானம்!

மாய வாழ்வின்
பாவம் போக்கிக்
காயம் அழிக்கும்
தூய்மைப் பணியில்
தீயே நீயும்!
கோபம் கொண்டே
கொதிப்புறல் சாபம்!

ஒற்றைத் துளியில்
கற்றையாய்க் கருக்கி
மொத்தமாய் முடிக்கின்றாய்!
வெற்றுக் கூடாய்
வீதியில் நிறுத்தி
வெஞ்சினம் அறுக்கின்றாய்!

நித்தமும் வணங்கும்
பொற்சுடர் என்றே
போற்றிடும் துணையே
விட்டிடு தீயே
வீறாம் அனலை!

உன்றனை விடவும்
நஞ்சுடை மனிதர்
சிந்திடும் வார்த்தை
நெஞ்சினைக் கருக்குது
நித்தமும் தீயாய்!

கீத்தா பரமானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan