இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சக்தி சக்திதாசன்

அம்மா என்றொரு தெய்வம்
அன்பின் அடிப்படைத் தத்துவம்
அகரமாய் வாழ்வின் ஆரம்பம்
ஆண்டவன் என்பதே தாயுள்ளம்

விளக்கின் ஒளியாய் ஒளிர்ந்திடும்
விந்தையை அறிந்தவள் அன்னையே
வியப்பின் வடிவாய் மலர்ந்தவள்
வித்தகப் பெண்ணாய் அன்னையரே !

கண்ணில் ஒருதுளி நீரென்றால்
கசியும் உதிரம் அவள்நெஞ்சில்
தனக்கென எதையும் எடுக்காமல்
தன்னை குழந்தைக்காய் ஈந்திடுவாள்

தாய்மை என்பது ஓர்வரமே !
தாயினம் உலகில் தனியினமே !
பெண்ணாய்ப் பிறந்த அனைவருமே
பூமியில் தாய்மனம் கொண்டவர்களே !

அன்னையர் தினத்தில் மட்டுமல்ல
அனைத்துத் தினமும் தாய்மையினை
போற்றிடும் வகையில் வாழ்ந்திடலாம்
பெண்களைக் கண்ணாய் மதிப்பதனால்

வாழிய ! வாழிய ! தோழியரே !
வாழிய ! வாழிய ! அன்னையரே !
புதியதோர் சமுதாயம் அமைத்திடவே
புதுமைகள் புரிந்தே வென்றிடுக

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading