நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

சிவா சிவதர்ஷன்

[ வாரம் 215 ]
“விடியல்”

இயற்கை காட்டும் வழியில் வாழும் உயிர்கள் யாவும்
இயல்பாய் அவற்றின் பொழுதும் இடையூறின்றி விடிந்து விடும் இறைவன்படைப்பாம் மனிதன் மட்டும் விடிதலின்றித் தவித்து நிற்கும்
இடையறாத ஆசைகளின் தாக்கம் அவனின் விடியலுக்கு தடையாய் அமைந்து விடும்.

ஐந்தறிவு உயிரினங்கள் என்றும் விடியலை நாடி அலைவதில்லை
ஆறறிவு மனிதன் மட்டும் ஆசையெனும் துன்பத்தை அறுக்கத் துணிவதில்லை
ஆறாம் அறிவிருந்தும் ஆராய்ந்து பார்த்திருந்தால் விடியல் வெகு தூரமில்லை
அடுத்தவரின் வெற்றியின் இரகசியத்தை அறிந்து கொள்ள ஆர்வமும் காட்டவில்லை

அடுத்தவரின் ஆக்கினைக்கு ஆட்பட்டாய்
அறிந்திருந்தும் முரண்படாது மௌனம் காத்தாய்
எழுந்து நின்று போராட தவறிவிட்டாய்
உனக்கென விடியலென்று ஒன்றுமில்லை உன்னை நீயே மாற்றிக்கெள்வாய்

நன்றி வணக்கம்

சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan