மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கீத்தா பரமானந்தன்

நீர்க்குமிழி !

முட்டிய நீரிடை
மூச்சுடன் எழுந்தே
வட்ட உருவினில்
வசீகரம் கூட்டிச்
சட்டென நொடியிற்
சரித்திரம் முடிக்கும்
நெட்டுயிர்ப் பற்ற
நீரின் குமிழி!

பட்டு பவிசு
புனுகு சந்தணம்
பற்றியே பூசிக்
கட்டுடல் போற்றிக்
கட்டிடும் கோட்டையும்
காத்திரமற்ற வாயுக்குமியாய்
கணத்தில் மறையும்
காகிதத் தோணியாய்!

ஆசைக் கடலிலே
அனுதனம் பவனி
அடுத்தவர் உணர்வை
அனுதினம் வதைத்தே
ஆடிடும் சதுரங்கவாட்டம்
எடுத்த பாத்திரம்
எழிலாய் முடிக்க
ஏற்றிட்ட நாடகம்
வாழ்வெனும் தோரணம்!
முடிவுரை அறியா
நீர்க்குமிழியாய் என்றும்!

கீத்தா பரமானந்தன்27-03-2023

நீர்க்குமிழி !

முட்டிய நீரிடை
மூச்சுடன் எழுந்தே
வட்ட உருவினில்
வசீகரம் கூட்டிச்
சட்டென நொடியிற்
சரித்திரம் முடிக்கும்
நெட்டுயிர்ப் பற்ற
நீரின் குமிழி!

பட்டு பவிசு
புனுகு சந்தணம்
பற்றியே பூசிக்
கட்டுடல் போற்றிக்
கட்டிடும் கோட்டையும்
காத்திரமற்ற வாயுக்குமியாய்
கணத்தில் மறையும்
காகிதத் தோணியாய்!

ஆசைக் கடலிலே
அனுதனம் பவனி
அடுத்தவர் உணர்வை
அனுதினம் வதைத்தே
ஆடிடும் சதுரங்கவாட்டம்
எடுத்த பாத்திரம்
எழிலாய் முடிக்க
ஏற்றிட்ட நாடகம்
வாழ்வெனும் தோரணம்!
முடிவுரை அறியா
நீர்க்குமிழியாய் என்றும்!

கீத்தா பரமானந்தன்27-03-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading