மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1787!

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகள்!

நீரும் வேண்டும்
வாழ்வின் தேட்டத்துக்கு
விளையும் பயிருக்கு
வானமுதம் நீராகும்
நீரைப் பேணி
அளவாய் அனுபவிக்க
உலகின் தேவையும்
உவப்பாய் நிறையும்!

உழைத்துச் சேர்க்கும்
பணத்தில் பாதி
உதவாது போதல்
என்ன நியதி
குப்பை தேங்கி
குவலயம் அழியும்
நிலையே நாளை
நிலைப்பது காண்போம்!!

கரையும் நீரைக்
கவனமாய்க் காத்து
நிறையும் கழிவை
நித்தம் குறைக்க
நன்மை கிட்டும்
நலவாழ்வு கைக்கெட்டும்!!
சிவதர்சனி இராகவன்
29/3/2023

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading