பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 218
18/04/2023 செவ்வாய்
“சுடர்”
———
சுதந்திரச் சுடரைக் கையேந்தி
சுழன் றடித்தாறே நம்காந்தி
இதந்தரு வாழ்வு தனைவேண்டி
இணைந்தது கூட்டம் இடிதாங்கி!

அப்துல் கலாமெனும் அறிவுச்சுடர்,
அழைத்தது மாற்றக் காலவிடர்!
சிற்றூர் பேரூர் பேதமின்றி,
சிலிர்த்தன மரங்கள் வேரூன்றி!

விளக்கு ஏந்திய சீமாட்டி,
விளைத்தாள் நலமே சுடரேந்தி!
கிழக்கு மேற்கென்ற வரையின்றி
கிடைத்தார் திரேசா சுடராகி!

ஒலிம்பிக் கிண்ணச் சுடரொன்று,
உலகில் எரியும் தினமுண்டு!
வலிக்கும் பொழுதைத் தாம்மறந்து
வாழ்வர் மக்கள் களிப்புற்று!

ஈகைச் சுடரைப் பயமின்றி,
ஏந்தி வணங்கும் நிலைதோன்றி,
வாகை சூடித் தமிழினமும்,
வாழும் நிலையும் வரவேண்டும்!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading