சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

Selvi Nithianandan

சுடர்
கார்த்திகை மாதம்
வந்தாலே
கண்ணீரும் தாரையாய்
வழிந்தோடும்
காசினியும் இருளாகி
மழையாகும்
கல்லறைகள் சுடராலே
ஓளியாகும்
கவலைகள் கனமாகி
ரணமாகும்

விளக்கீடு வந்தாலே
வீடுகள் வீதிகள் ஆலயம்
ஒளியாகி காட்சிபெறும்
விருட்சமும் தாக்கத்தால்
தீப்பிழம்பாக மாறிவிடும்

கவனத்தின் குறைவால்
பற்றிவிடும் வீடும்
தவனத்தின் நிறைவால்
சுடரும் ஒளியாகும்

ஆதவனின் சுடரால்
அவனிக்கே ஆட்சி
அண்ணாமலையான் சுடரால்
அடியவர்க்கு மாட்சி

Nada Mohan
Author: Nada Mohan