சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan

சுடர்
கார்த்திகை மாதம்
வந்தாலே
கண்ணீரும் தாரையாய்
வழிந்தோடும்
காசினியும் இருளாகி
மழையாகும்
கல்லறைகள் சுடராலே
ஓளியாகும்
கவலைகள் கனமாகி
ரணமாகும்

விளக்கீடு வந்தாலே
வீடுகள் வீதிகள் ஆலயம்
ஒளியாகி காட்சிபெறும்
விருட்சமும் தாக்கத்தால்
தீப்பிழம்பாக மாறிவிடும்

கவனத்தின் குறைவால்
பற்றிவிடும் வீடும்
தவனத்தின் நிறைவால்
சுடரும் ஒளியாகும்

ஆதவனின் சுடரால்
அவனிக்கே ஆட்சி
அண்ணாமலையான் சுடரால்
அடியவர்க்கு மாட்சி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading