மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

சுடர்

திரிதாங்கு சுடரும்
இருளோட்ட உதவும்
பெரிதாகிச் சிறிதாகிப்
பேதமும் காட்டும்

இங்குமங்கும் அலைந்தே
சிறுகாற்றை ஏய்க்கும்
பொங்கிவீசின் சுடரும் பொசுங்கி மாயும்

தொழுவார் முன்னே
சுழன்றாடிச் சுடரும்
பழுது நீக்கிடப்
பரமனைக் காட்டும்

பகலும் இரவும்
பருவம் எதிலும்
நிகழுமே மங்களம்
அமங்கலம்

அதில்வந்து சுடரும்
அமரும் இடம்கண்டு

சுடரை நோக்கின்
சுவறும் ஞானம்
இடரைப் போக்கிட
இயற்றிடு ஒளித் தியானம்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading