06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
சுடர்
திரிதாங்கு சுடரும்
இருளோட்ட உதவும்
பெரிதாகிச் சிறிதாகிப்
பேதமும் காட்டும்
இங்குமங்கும் அலைந்தே
சிறுகாற்றை ஏய்க்கும்
பொங்கிவீசின் சுடரும் பொசுங்கி மாயும்
தொழுவார் முன்னே
சுழன்றாடிச் சுடரும்
பழுது நீக்கிடப்
பரமனைக் காட்டும்
பகலும் இரவும்
பருவம் எதிலும்
நிகழுமே மங்களம்
அமங்கலம்
அதில்வந்து சுடரும்
அமரும் இடம்கண்டு
சுடரை நோக்கின்
சுவறும் ஞானம்
இடரைப் போக்கிட
இயற்றிடு ஒளித் தியானம்
மனோகரி ஜெகதீஸ்வரன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.