மனோகரி ஜெகதீஸ்வரன்

சுடர்

திரிதாங்கு சுடரும்
இருளோட்ட உதவும்
பெரிதாகிச் சிறிதாகிப்
பேதமும் காட்டும்

இங்குமங்கும் அலைந்தே
சிறுகாற்றை ஏய்க்கும்
பொங்கிவீசின் சுடரும் பொசுங்கி மாயும்

தொழுவார் முன்னே
சுழன்றாடிச் சுடரும்
பழுது நீக்கிடப்
பரமனைக் காட்டும்

பகலும் இரவும்
பருவம் எதிலும்
நிகழுமே மங்களம்
அமங்கலம்

அதில்வந்து சுடரும்
அமரும் இடம்கண்டு

சுடரை நோக்கின்
சுவறும் ஞானம்
இடரைப் போக்கிட
இயற்றிடு ஒளித் தியானம்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

    Continue reading