பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சுடர்!
படர்கின்ற இருளைப்
பகலொளி ஆக்கப்
பதமொடு வந்தே
பரவிடும் இன்பம்!

சிரமங்கள் விலக்கிச்
சிந்திடும் ஞானம்
உரமதைப் பகரும்
உள்ளத்தில் நாளும்!

பேதங்கள் அகற்றப்
புறப்பட்ட நேசம்
சாவிலும் நின்றே
சரித்திரம் பகரும்!

அறமதும் கூடும்
அறிவியல் நாடும்
விரவிடும் சுடரென
விரட்டிடும் மூடம்!

தீபத்தின் சுடராய்த்
தீமைகள் பொசுங்கும்
அறிவதன் சுடரில்
அகிலமும் பணியும்

கற்றலிற் பற்றினில்
கனன்றிடும் முனைப்பினில்
காலமும் மின்னுவோம்
கனிந்திடும் சுடராய்!

கீத்தா பரமானந்தன்
10-04-2023

இருளெனும் மாய
இடரினைப் போக்கி
இயக்கிடும் ஞானம்
சுடரொளி யாகும்!

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading