க.குமரன் 13.4.23

வியாழன் கவி
ஆக்கம் 109

சித்திரை வந்தாலே

வருடம் ஓர் சித்திரை
வந்திடுமே மாதம் நான்கில்
ஏமாத்தி ஏய்து
ஏப்பிரில் பூல் ஆக்கிடுவோமே!

அத்தமோடு சித்திரை
அடுத்த வாழ்வு கொண்டும்
ஆகாது என்பாரே பெரியோர்கள்!

தமிழ் தையும் பிறந்துடும்
தமிழர் பஞ்சாங்கமும்
வந்திடுமே!
மருதடி தேருக்கு
மக்கள் எல்லோரும் செல்வாரே!

சிறப்பு நிரைந்த
சித்திரையே!-ஆனால்
சீர் நிலையற்ற
காலநிலையே!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading