நேவிஸ் பிலிப்

கவி இல (98) 13/04/23
சித்திரை வந்தாலே

சித்திரை வந்தாலே கோடையும்
கூட வர ,வசந்த கால கீதங்களும்
வண்ண வண்ண கோலங்களும்
இத்தரையில் நிறைந்து பொலியுது

புத்தாண்டு பூத்து வர
புத்துணர்ச்சி பொங்கிவரும்
புதுப் புதுச் சிந்தனைகள்
பூப் பூவாய் மலர்ந்திடுமே

சித்திரையால் வையகத்தில்
நல்லாட்சி அமைந்திடணும்
நலம் தரும் சிந்தனையால்
நல்லாட்சி மலர்ந்திடணும்

நிறைந்த நெஞ்சினிலே
நித்தமும் நிம்மதி
முத்தான முன்னேற்றம்
முத்திரையாய் பதித்திடுமே

சிங்காரச் சித்திரையே
மக்கள் மனம் மகிழ
விழித்திடு உன் விழித்திரையை
இன்னருளை வழங்கிடு பூவுலகில்

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading