சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

கமலா ஜெயபாலன்

சுடர்
இன்பம் பெருகி இன்னல் நீங்கிடும்
இதயச் சுடரும் இதமாய் மாறிடும்
அன்பின் நாதம் அழகாய் பிறந்துடும்
அதற்காய் என்பும் இசைந்தே உருகிடும்

கண்ணில் கண்ட காட்சிகள் யாவும்
கருணை வடிவாம் கடவிளின் கொடையாம்
எண்ணில் அடங்கா ஈகைச் சுடர்கள்
எரிந்தன மண்ணில் ஏங்கின மனமும்

விண்ணிற்கு அழகு விண்மீன் கூட்டம்
விடுதலை என்பது வீரனின் கனவு
பண்ணில் பருகிடும் பழரசம் இனிமை
பலரும் ஏற்றிடும் பாசமும் சுடரே

ஒளியின் சுடரில் உலகம் உருழுது
உழவன் வாழ்வும் உயருது இதுவால்
வளியும் வீசியே வாழ்திடும் உயிர்கள்
வந்திடும் வசந்தம் வாழ்வினில் மலர்ந்தே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading