மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

க.குமரன் 27.4.23

வியாழன் கவி
ஆக்கம் 111

வளர்ந்த குழந்தைகள் தாமே!

எழுதிடும் கவிகள்
வலியினைக் தாங்குமா
வரியதின் வழிதனில்
மன வலி போக்குமா ?

சிறகுகள் ஒடித்திட
பறவைகள் பறக்குமா
பறந்திட உதவிட
வார்த்தைகள் போதுமா ?

தாங்கும் இதயங்கள்
சார்பதை தேடுமா?
வருகின்ற நாட்களில்
வழித்துனை தோன்றுமா?

புலர்ந்திடும் பொழுதுகள்
விடிவதைக் காட்டுமா?
கரங்களைக் கூப்பி
கடவுளை நாடி

நலம் வளம் பெற
நம்பிக்கை கொள்வோமா!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading