மாறியதே வாழ்க்கை

நகுலா சிவநாதன் மாறியதே வாழ்க்கை மாறியதே வாழ்க்கை மனம்போன போக்கிலே! கூறியதே கதைகளும் குழம்பிய குட்டைகளாய் வெப்பத்தின் அதிகரிப்பாய் வேறிட வாழ்க்கையும் இன்று தெப்பமாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

நடிப்பு
நல்லது நடிப்பு நாலுபேர் சிரிப்பு
நலமாய் வாழ நமக்கது வேண்டும்
வல்லமை கொண்டு வாழ்வது இன்பம்
வரட்டுக் வாழ்வு நடிப்பின் உச்சம்/

அன்பு என்ற ஆயுதம் உலகில்
ஆளும் உண்மை ஒன்றே மெய்யாம்
என்பும் பிறர்க்கு உரித்தாம் என்று
எழுதி வைத்தார் வள்ளுவர் அன்று/

முகத்தில் மூடி அணிந்து வாழும்
மூடர் கூட்டம் இருக்கும் வரையும்
நேர்மை என்ற நீதி மறையும்
நன்மை யாவும் நலிந்து மறையும்/

உள்ளும் புறமும் உண்மை வேண்டும்
கள்ளம் இல்ல அன்பு வேண்டும்
திண்ணம் ஆன தீர்ப்பு வேண்டும்
தீமை எல்லாம் தீர வேண்டும்/

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading