நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

க.குமரன் 9.5.23

சந்தம் சிந்தும்
வாரம்-221

காணி

ஆறு அடியோ
நாலு அடியோ
எனது என்பதில்
எத்தனை திளைப்பு!

மண் என்றோ
பொன் என்றோ
பெண் என்றோ
மயங்காதோர் யார்?

வேலிகள் நடந்திடும்
வேண்டும்வரை நகர்ந்திடும்
ஆனவரை எனதாக
ஆசையும் வளர்ந்திடும்

வான் பயிரும் பங்காகும்
வாய்த்த கிணறும் பங்காகும்
வாய்கால் வழியும் பங்காகும்
வழி தரவும் வழக்காடும்.

இரவலும் பங்கும்
இனித்திடாத உறவுகள்
வகுத்தவும் பிரித்தலும்
வலுவாகும். உறவுகள

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan