10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
வியாழன் கவிதை 1806
உழைப்பே உன்னதம்!
பொருளே ஆதாரம் என்றெண்ணி நாளும்
பொழுதை நிறைத்து
பெருமை சேர்க்க
உழைப்பே உன்னதம்
உயர்வு உத்தமம் ஆகும்
காலை விடியல் கண்டு
மாலை மயக்கம் நீக்கி
மண்ணில் உயிர்ப்பு தேக்கி
மலரும் பொழுதை உயர்த்த
உன்னத ஆசான்
உயரிய விருதே உழைப்பு!
விருப்பு நாடிச் செய்யும்
வியர்வை நாளும் சிந்தும்
உவகை தருமே உழைப்பும்
களைப்பில் கனிவது வரவே
உழைக்கும் கரமே வாழ்க!
சிவதர்சனி இராகவன்
3/5/2023
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.