இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

காணி

அசையாச் சொத்து
அருமை கண்டு
அகலம் நீளம்
அகன்ற நிலத்தை
இசைந்து தந்தாள்
எனக்கு உரித்தாய்
இறக்கும் முன்னே
ஈன்றவள் விருப்பாய்

அங்கே காவலை நிகழ்த்தும்
அருகருகே நிமிர்ந்த தடிகள்

குடைவிரித்து நிழல் கொடுக்கும் மரங்கள்
குவித்தே கொடுக்கும் வளங்கள்
இடைமறிக்க
இதழை விரிக்கும் மலர்கள்
இனிய தேனை சுரக்கும்
படையோடு நிற்கும் பக்கத்தே சிட்டு
பற்றின் பறந்தோடும் இடம்விட்டு

திருட்டை நிகழ்த்த
திரளும் அணில்கள்
திகட்டா விருந்தளிக்கும் பழங்கள்

பறித்தாரே காணியை
பயத்தை ஏவி
பகையை மனதில்
பலநாள் காவி
முறியடிக்கத் திறனற்று
மூண்ட சினத்தை
மனதுள் அடக்கி
வாழுகின்றேன் கூனி

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading