” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 221

தலைப்பு – காணி

பாரம்பரிய பரப்பானது பரம்பரையாய் கிடைத்தது
பூட்டனுக்கு கிடைத்தது தாத்தா காப்பாற்றியது
பெற்றோரின் உழைப்பால் நாகரீக கட்டிடமானது
ஆதீக்க அராயகத்தால் அன்று கலையிழந்தது.

ஆயிரம் காணி வாங்கினாலும் கிடைக்காது
அரண்மனை கட்டினாலும் சந்தோஷம் கிடைக்காது
பரம்பரை கால்பதித்த பண்பட்ட காணியிலே
மண்வாசம் மாறா மதிப்பான காணியது.

சொந்தங்கள் கூடியிருந்து சொர்க்கம் காட்டியது
சொந்தமான காணியிலே செலவில்லா இயற்கைவளமது
மணல்வீடு கட்டவில்லை மானம்மாய் திமிரோடு
அசையாத வாழ்க்கையது அடிமையில்லா சொர்க்கம்மது.

நன்றி வணக்கம்🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
09/05/2023

Nada Mohan
Author: Nada Mohan