உயிரான உறவு..

வியாழன் கவி 2288 உயிரான உறவு.. உதிரத்தில் உணவூட்டி உணர்வுக்குள் அன்பேந்தி உலகுக்கு வழிகாட்டியவள் உயிரான உறவானாள்.. கருவினுக்கு காரணியாய் காலமெலாம் தாங்கி...

Continue reading

உயிரான உறவே…

வசந்தா ஜெகதீசன் உயிரான உறவே... வெற்றி மிகு வாழ்வில் வீறு கொள்ளும் சிந்தை பற்றியே படர்கின்ற பாதையின் செதுக்கல் பாசமுடன் காட்டி நேசமுடன்...

Continue reading

உயிரான உறவு…..

இரா.விஜயகௌரி வைகறைகள் உயிர்ப்பெழுதும் வனப்பு மிக்க விடியலுக்கு தினமெழுதும் மொழிப்புனலாய் கனவெழுதும் தேவதை இவள் தன்வலியை தான் மறப்பாள் உதிரத்துள்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

பெற்றோரே

ஞாலத்திலே மனுஷ பாக்கியம் கிடைத்தது
கோலத்தை ஈருயிர் சேர்ந்தே படைத்தது
பொய்யான கூடு என்றாலும் கற்றோரும்
மெய்யென்றே நினைத்து படைத்தார்கள் பெற்றோரும்

பாக்கியம் கிடைத்தது அன்னையின் அருகில்
போக்கிய வாழ்வெல்லாம் தந்தையின் நிழலில்
காவிக்கொண்ட நல்வாழ்வை தந்தவர் இவர்கள்
கோவிலுக்குள் இருக்கவேண்டிய தெய்வங்கள் அவர்கள்

தாய் ,மொழியாக தந்தையோ வழியாக
சேய் விழிகளின், பார்வையின் ஒளியாக
அரியதோர் உறவுகளாய் பெற்றோர்களே உலகில்
பெரியபேர்கள் அவர்களிடம் கற்றுக்கொண்டேன் பலதை

கருத்தரித்தேன் , கொண்டார்கள் என்னாலே  மகிழ்ச்சி
உருத்தித்த பின்னரும் தொடருதந்த நிகழ்ச்சி
ஐயமில்லை எனக்கு அருள்தரும் சாமிகள்
வையகத்தின் மேலே சுழலும் பூமிகள்

ஜெயம்
15-05-2023

Nada Mohan
Author: Nada Mohan