Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-06.06.2023
கவிதை இலக்கம்-225
ஆறுமோ ஆவல்
———————–
மறுக்க முடியுமா மனிதனை
மறுத்தால் வாழ முடியுமா தமிழனாக
கூட்டு குடும்பமாக உறவாக அளித்து விட்டதை
திரும்ப பெற கிடைக்காதபோது
ஆறுமோ ஆவல்
இருக்க இடமின்றி அலைந்து
காணிகளை பறி கொடுத்து
பெளத்த விகாரைகள் கிளம்பும்போது
இளஞ் சிறார்கள் போதையில் மூழ்கும்போது
எம் சந்ததி நீண்ட காலம் வாழுமோ என
ஆறுமோ ஆவல்
கண்ணீர் வடிக்கும பெற்றோர்கள் கவலையில்
இளையோரின் கற்பனைகள் எதிர்பார்ப்புக்கள்
தவிடு பொடியாகும் நிலையில்
கொலை களவு வெட்டுக் கொத்து
எம் இனம் அழியப் போகும் நிலையில்
ஆறுமோ ஆவல்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading