திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

பவானி மூர்த்தி Swiss

எழுத்தின் வித்தே, பூத்தெழும் தமிழே

எழுத்தின் வித்தாய் எழுவாய் தமிழே
—– எங்கும் ஒலிக்கும் என்றன் தமிழே .
பழுத்த கனியாய் பண்பில் சுவைப்பாய்
—– பாரில் ஓங்கிப் பருவம் பார்ப்பாய் .
விழுந்த இடத்தில் விதையாய் முளைப்பாய்
—— விருட்சம் நீதான் விரைந்து வளர்வாய் .
முழுதும் போற்ற முத்தம் இடுவாய்
—– முத்தாய் மின்னி முகப்பாய் நிற்பாய் .

ஒழுக்கம் தன்னை ஓதும் தமிழே
—– ஒன்றும் மக்கள் ஒன்றச் செய்வாய்
இழுக்கோ உனக்கும் இல்லை இல்லை
—– இன்சொல் தானே உன்றன் எல்லை .
விழுப்பம் தரவே விரைந்து வாராய்
—— வீடும் நாடும் விரவி வாராய் .
எழுத்தும் வித்தும் என்றும் இணைய
—— ஏற்றம் பெற்றாய் என்றன் உயிரே .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading