விஜயகுமார் ஜதுர்ஷிகா.

வரப்புயர

காடு வெட்டி
நிலம் உழுது
கழனி செய்ய
கலப்பையுடன் சென்றோமே.

விதை தூவி
நாம் செல்ல
சிறு முளை ஒன்று
மண்ணில் தோன்றியது.

வளர்ந்து வரும்
பயிருக்காக,
நீர் பாய்ச்ச வேண்டுமென
கட்டினோமே வரம்பு உயர

வரம்பு வழியே
நீர் சென்று
நெல்லின் வேரை
தொட்டு விட

அருவடைக்காய் முற்றிய
பருவம் கிட்டியதே
கிட்டியதும் வெட்டி அதை
எடுத்தோமே உணவிற்காய்

பசி எல்லாம்
நீங்கி விட
எம் மனதில்
இன்பம் இங்கே

பசிக்கு மருந்தாக
விவசாயம் மாறி விட
இதை வைத்து
வறுமை ஒழிக்க
நாமே வழி கண்டோமே
எம் வாழ்வில்.

*******
விஜயகுமார் ஜதுர்ஷிகா.
முல்லைத்தீவு உடுப்புக்குளம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading