பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 228

பாட்டி

மடிமீது தலை வைத்து
படுத்திட ஆசை
செவியோடு செய்தி
ஒன்று சொல்லிட. ஆசை

நினைத்தது போல
இனிமை கொண்ட உலகம்
இல்லை உணர்ந்தேன்
நம்பியவர்களின் ஏமாற்றும்
நாட்களைக் கடந்து
உணர்ந்தேன்

வெட்ட வெளி போல
தனிமை ஒன்று
எனக்குள்ளும் உண்டு
கட்டி அடக்கும்
தூக்கணாம். குருவி போல
குடும்பமும் உண்டு

முந்தானை சேலைக்குள்
அடக்கிய திண்பண்டங்கள்
இன்னும் வேண்டும்!
திண்டிட முடியா
திண்டாக் கதை
சொல்லவும் வேண்டும்!

முதிர்வு கொண்ட
உன் பேச்சும்
கனிவு கொண்ட
உன் ஸ்பரிசமும்
வேண்டும் என்றுமே !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan