சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நேவிஸ் பிலிப் கவி இல (108) 06/07/23

வரப்புயர!!!

கரையில்லா குளமும்
அணையில்லாஆறும்
பெருக்கெடுக்கும் வெள்ளத்திலே
கரை புரண்டு ஓடுதல் போல்

நன்னெறி ஒழுக்கம்
பேணாதோரக்கும்
சொல்புத்தி கேளாது
பறக்கணித்து வாழ்வோருக்கும்

கூறுகின்ற அறிவுரைகள்
புறக்குடத்தில்
வார்த்த நீர் போல
பாழாய்த்தான் போய் விடுமே

வரப்பில்லா வயல்தனிலே
வழிந்தோடும் நீர்த்துளிகள்
புல்லுக்கும் பொசிந்தங்கே
களைகளையும் வளர்த்திடுமே

உள்ளமெனும் நிலந்தன்னை
நற்செயலால் பண்படுத்தி
பக்குவமாய் வரப்புயர்த்தி
பருவத்தே பயிர் செய்து

விழிப்புடனே காத்து வந்தால்
வரப்புயர நீருயர்ந்து
நெற்கதிர்கள் செழித்துயர்நு
குவிந்து வரும் நெல் மணிகள்
வாழ்வுதனை வளமாக்குமன்றோ!!!

அனைவருக்கும் நன்றிகளோடு
ணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan