03
Jun
வியாழன் கவி-2348
பதியமிடும் எழுத்தாணிகள்..!!
விதியென்று நொந்து கிடக்கா
மதி கொண்டு மார்க்கம் தொட்டு
நதியென வேகம் எழுத்தில்...
03
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
நேவிஸ் பிலிப் கவி இல (108) 06/07/23
வரப்புயர!!!
கரையில்லா குளமும்
அணையில்லாஆறும்
பெருக்கெடுக்கும் வெள்ளத்திலே
கரை புரண்டு ஓடுதல் போல்
நன்னெறி ஒழுக்கம்
பேணாதோரக்கும்
சொல்புத்தி கேளாது
பறக்கணித்து வாழ்வோருக்கும்
கூறுகின்ற அறிவுரைகள்
புறக்குடத்தில்
வார்த்த நீர் போல
பாழாய்த்தான் போய் விடுமே
வரப்பில்லா வயல்தனிலே
வழிந்தோடும் நீர்த்துளிகள்
புல்லுக்கும் பொசிந்தங்கே
களைகளையும் வளர்த்திடுமே
உள்ளமெனும் நிலந்தன்னை
நற்செயலால் பண்படுத்தி
பக்குவமாய் வரப்புயர்த்தி
பருவத்தே பயிர் செய்து
விழிப்புடனே காத்து வந்தால்
வரப்புயர நீருயர்ந்து
நெற்கதிர்கள் செழித்துயர்நு
குவிந்து வரும் நெல் மணிகள்
வாழ்வுதனை வளமாக்குமன்றோ!!!
அனைவருக்கும் நன்றிகளோடு
ணக்கம்.
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...