Selvi Nithianandan

காற்றாலை ( 578)

காற்றாலே உந்தலும்
உற்பத்தியின் ஆற்றலும்
விசையின் சுற்றும்
பொறி அமைப்பாகுதே

இயந்திரமே கலன்களாகி
இறக்கைகள் தகடுகள்
வேகத்தின் சுழல்வாகி
மின்னாகி இசைவாகுதே

ஆதிகாலத்தில் அரைக்கவும்
நீர் இறைப்பு மரஅறுவைக்கும்
சுற்றுச்சூழலை பசுமையாக்கி
பயன்பாடகி செயல்பாடானதே

காற்றுச்சுழலி காற்று விசையாழி
காற்றாலை பெயருமாம்
ஒலி மாசுபாடு, வாழ்விடச் சிதைவு
பறவையின் இறப்பும் பாதிப்பாம்

கண்டங்கள் காற்றாலை பரவலாகி
கரண்டுக்கும் மின்னியக்கி சான்றாகி
தொழில் நுட்பம் பலவாய் உருவாக்கி
காற்றின் திசைக்கேற்ப இயங்குதே

Nada Mohan
Author: Nada Mohan