ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

Selvi Nithianandan

காற்றாலை ( 578)

காற்றாலே உந்தலும்
உற்பத்தியின் ஆற்றலும்
விசையின் சுற்றும்
பொறி அமைப்பாகுதே

இயந்திரமே கலன்களாகி
இறக்கைகள் தகடுகள்
வேகத்தின் சுழல்வாகி
மின்னாகி இசைவாகுதே

ஆதிகாலத்தில் அரைக்கவும்
நீர் இறைப்பு மரஅறுவைக்கும்
சுற்றுச்சூழலை பசுமையாக்கி
பயன்பாடகி செயல்பாடானதே

காற்றுச்சுழலி காற்று விசையாழி
காற்றாலை பெயருமாம்
ஒலி மாசுபாடு, வாழ்விடச் சிதைவு
பறவையின் இறப்பும் பாதிப்பாம்

கண்டங்கள் காற்றாலை பரவலாகி
கரண்டுக்கும் மின்னியக்கி சான்றாகி
தொழில் நுட்பம் பலவாய் உருவாக்கி
காற்றின் திசைக்கேற்ப இயங்குதே

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading