ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 229
செவ்வாய் 18/07/2023
“இயற்கை”
—————
இயற்கை என்னும் இனியவள்
இங்கும் அங்கும் உறைபவள்!
செயற்கை யென்பதன் எதிரவள்
சேவிக்கும் தெய்வம் ஆனவள்!

“வைகறை” யெனும் பெண்ணவள்
வர்ணம் கொண்ட அன்னவள்!
கைவளை குலுங்க காண்பவள்
“காலை”யின் தங்கை ஆனவள்!

“வசந்தம்” என்னும் மென்னவள்
வாலிப வயதின் கண்ணவள்!
நிசந்தான் வாழ்வென நினைத்தவள்
நீலி “கோடை”யால் அழிந்தவள்!

“தென்றல்” என்னும் தேவியவள்
தேனமு துண்னும் பாவியவள்!
முன்றல் மல்லியை முகர்ந்தவள்
மூத்தவள் “வாடை’யின் இளையவள்!

ஆழியின் மேனியில் உறைபவள்
“அலை”யெனும் நாமம் உடையவள்!
காளியாய் மாறும் குணத்தவள்
கண்களைப் பனிக்க வைப்பவள்!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading