சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

18.07.23
கவி இலக்கம் -110
இயற்கை

அழகான கண்ணுக்கு
ஆட்டிப் படைக்கும்
விதம் விதமான
வர்ண அழகு

மண்ணுக்கும் விண்ணுக்கும்
இடையே இயற்கை எனும்
விருந்தை ஈன்றெடுத்த இறைவன்
கொடை தனி அழகு

வானமெனும் நீலக் கடலில்
விண்மீன்கள் பரப்பி சூரிய
சந்திரனைச் சுழலவிட்டு

ஒளியும் இருளும் சூழ்ந்திட்ட
இரவு பகல் பேரழகு

மாரியும் கோடையும்
களைப்பாறவே காலங்கள்
பகிர்ந்தது பாரழகு

காவியம் படைக்கும்
மாந்தர் இடையே
ஓவியம் வரையும்
பச்சைப் பசேலாய்

மரம்,செடி,கொடி,புல்,பூண்டும்
பார் போற்றும் வகை வகையான
பறவை,மிருகமும் இயற்கைக்
கொடைதனில் அழகோ அழகு .

Nada Mohan
Author: Nada Mohan