அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

18.07.23
கவி இலக்கம் -110
இயற்கை

அழகான கண்ணுக்கு
ஆட்டிப் படைக்கும்
விதம் விதமான
வர்ண அழகு

மண்ணுக்கும் விண்ணுக்கும்
இடையே இயற்கை எனும்
விருந்தை ஈன்றெடுத்த இறைவன்
கொடை தனி அழகு

வானமெனும் நீலக் கடலில்
விண்மீன்கள் பரப்பி சூரிய
சந்திரனைச் சுழலவிட்டு

ஒளியும் இருளும் சூழ்ந்திட்ட
இரவு பகல் பேரழகு

மாரியும் கோடையும்
களைப்பாறவே காலங்கள்
பகிர்ந்தது பாரழகு

காவியம் படைக்கும்
மாந்தர் இடையே
ஓவியம் வரையும்
பச்சைப் பசேலாய்

மரம்,செடி,கொடி,புல்,பூண்டும்
பார் போற்றும் வகை வகையான
பறவை,மிருகமும் இயற்கைக்
கொடைதனில் அழகோ அழகு .

Nada Mohan
Author: Nada Mohan