அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

இயற்கை

மழையும் பொழிய மண்ணும் குளிர
விளையும் பயிரில் விளைச்சல் பெருகும்
உழைக்கும் மக்கள் உயர்வும் காண
முளைக்கும் விதையும் மூப்புடன் முளைக்கும்

இயற்கை தந்த எழிலான பசுமையை
செயற்கை கொண்டு சிதைக்காது நாமும்
முயற்சி தருகின்ற முன்னேற்றப் பாதையில்
உயற்சி கண்டும் உள்ளம் குளிருவோமே

பற்றுக் கொண்டும் பவனியைக் காத்து
சுற்றும் பூமியில் சுகத்துடன் வாழ்வோமே…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan