மனோகரி ஜெகதீஸ்வரன்

தலைப்பூ

மங்களத்தின் அடையாளமே
மங்கையின் தலைப்பூ
பொங்கிடு மகிழ்வோ
அதனது விதைப்பு
தங்கிடு தாலிக்கும்
அதுதரும் வனப்பு
வண்ண வாசனைப் பூக்கள் தருமே
பெண்ணின் கூந்தலில் அமர்ந்திருந்து அழைப்பு
அதுகாணில் ஓடும் அண்டிய களைப்பு

ஒற்றையாயும் கூந்தலில் தொற்றிக்
காட்டும் ஒய்யாரம்
பற்றைக் காடாயும் பரவி நிறையும் காதோரம்

தொட்டிலாயும் ஆடும்
தொடு சரத்தால்
தொட்டுச் சூட்டிடவும் வைக்கும்
அன்பர் கரத்தால்

குமரிக்கும் எழில்கூட்டும்
வண்ணம் தூவி
வண்டிணையும் அழைக்கும்
வாசனை காவி
அமங்கலி தலைப்பூவைப்
பறிப்பர் தாவி
அதுகண்டு வதைபடும்
பார்ப்பார் ஆவி
இதிலென்ன உண்டு நீதி
இதயத்தைத் தொலைத்து விட்டதே மானிட ஜாதி

கிழவிக்கும் கிட்டும்
வருமானம்
விற்பனை கூடி
அழவைக்கும் தலைப்பூவும் அடுத்தநாள் வாடி
அதன்பின்னே அதுவும் வீழும்
மண்ணை நாடி

மனோகரி ஜெகதீஸ்வரன்

பதியப்படவில்லை

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading