கெங்காஸ்ரான்லி

இருட்டில்…
————-
மாலை விரைவில் இருட்டி விடும்
காலை மேகமூட்டம் இருண்டிருக்கும்
பகல்பொழுது குறைவாகவே இருக்க
இரவோ கூடின நேரம் இருண்டிருக்கும்
வீடுகள் எல்லாம் அமைதி நிலவும்
றோட்டெல்லாம் வெறிச்சென இருக்கும்
மக்கள் நடமாட்டம் அருகியிருக்கும்
பாக்கள புனைய உள்ளம் ஏவும்
இருட்டிலே எல்லாமே சூனியம்
மரட்டும் பயமும் மனதில் தோன்ற
உருட்டும் சத்தம் ஓசை கேட்க
வெருட்டும் தாக்கம் விறைத்து நிற்க
இருட்டை விரும்புபவர் இரக்கமிலார்
பொருளும் பொன்னும் தேட்டமடைவார்
எண்ணும் யாவும் காரியமாக வேண்டி
பண்ணும் வேலை விண்ணென முடிப்பார்
நேரமாற்றம் ஐப்பசிக் கடைசியில்
காலமாற்றம் கடுங்குளிர் இல்லை
இலையும் கொட்ட மழையும் பெய்ய
அலையுது மனமோ விடியலைத் தேடி
நன்றியுடன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading