” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

நீரிழிவு

உடலுழைப்பு அற்றோருக்கு ஒரு எச்சரிக்கை
உழைக்காமல் உண்போர்கள் இதனால் முற்றுகை
விளையாட்டை நிந்தித்தோர்க்கு கணையத்தின் தண்டனை
அமிர்தத்தை உண்டாலும் விசமாகும் இழிநிலை

வியர்வைதனை சிந்துவோரை சீண்டியும் பார்க்காது
இயங்கிவிடின் உறுப்புக்களும்
இழிவுவந்து சேராது
இரத்தோட்டம் நரம்புகளில் சீர்குலைந்து போகாது
குளுக்கோசின் முக்திநிலை தேகத்தை உருக்காது

பசித்தழும் செல்களுக்கு சுரப்பு உதவவில்லை
புசித்துவிட நினைத்தாலும் அதற்கும் எல்லை
சிறுநீரில் குடிபுகுந்து சீனியின் ஆட்டம்
சுருக்கென்று ஓரிரவில் விளையாட்டைக் காட்டும்

இரையினை உமிழ்நீரில் கலந்துமே உண்டு
இரைப்பைக்கு வேலையை கொடுத்திட்டால் நன்று
சிறுகுடல் பெருங்குடல் நட்பினைக் கொண்டு
பிறவிக்கு செய்வோமே நலத்திற்காய் தொண்டு

ஜெயம்
12-11-23

Nada Mohan
Author: Nada Mohan