நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி வாரம்_128
“எச்சம்”
மனித புதை
குளியின் எச்சம்
அச்சத்தில் மக்கள்
காணாமல் போனவர்கள்
புதைகுளிக்குள் எச்சமா!!

நாளை வருவான் என் மகன் என நம்பிக்கையுடன் காத்திருக்கும் தாய்க்கும் தந்தைக்கும்
புதைந்திருக்கும் மனித எலும்புக் கூடுதான் மிச்சமாய் மிதக்குமா!!

வெண்குடையுடன்
வெள்ளை உடையுடன் சென்ற
சாமாதான புறாக்கள் எல்லாம் எங்கே என கேட்டு கதறியழும்
மனைவிக்கு மக்களுக்கு என்ன பதில் கிடைத்திடுமே!!

விலங்குகளின் எச்சம்
பறவைகளின் எச்சம்
விலைவாசியில் உச்சம்
உரத்திற்கு
அதி உச்சம்!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan