மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ செங்காந்தள் மலர்கள் “ கவி…..ரஜனி அன்ரன் (B.A) 30.11.2023

கார்கால கார்த்திகையில்
கனமழை பொழிகையில்
மண்ணினுள் வேரோடி
வேலிகளில் படர்ந்து கொடியாகி
காவல் தெய்வங்களை ஆராதிக்க
ஆண்டிற்கு ஒருமுறையாக
அழகாகப் பூத்துக் குலுங்குமே
செங்காந்தள் மலர்கள் !

செங்குருதி நிறத்தோடு
பொன்மஞ்சள் வண்ணம் தாங்கி
அகல்விளக்காய் ஒளிர்ந்து
கார்த்திகை மைந்தர்களை
கைகூப்பி தொழுகிறதே
செங்காந்தள் மலர்கள் !

பழந்தமிழர் இலக்கியங்களில்
பண்பாட்டு விழுமியங்களில்
புறநானூற்று வீரத்தில் கலந்து
தேசத்தின் தேசீயப் பூவாக
தேச மைந்தர்களின் ஆராதனைப் பூவாக
பூத்துக் குலுங்குமே செங்காந்தள் மலர்கள் !

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading