” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

கலவரம்

ஆணவக் கேடு அறிவுத் தீட்டு
ஆகாக் கூட்டு அண்டி அடக்கின்
அங்கு தோன்றும் கலவரம்

அருளைச் சிந்தா அக்கிரம நிலவரம்
இருளைப் பூட்டி
இயக்க மழிபின்
கருக்கொண்டு கருவ
றுக்கும் கலவரம்
மருக்கண்டு மருண்டோடி
மறைந்தோடும் சுகவரம்

தீண்டும் துயரை தடுக்க
தாண்டு வகையறி யாநிலை
நீண்டு செல்லின் நிமிடமும்
மனது காணும் கலவரம்

பிறந்த காதல்
பிறழ்வு காணில்
பிறக்குமங்கு கலவரம்
குளறு மனமும் குழம்பியே உலாவரும்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan