” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

கலவரம்

சூறையாக்கப் பட்டது
புனிதம்
வெறிகொண்டு தாக்குகின்றது
அவலம்

நல்லொழுக்கம் காட்டி
நின்று
நன்மையின் பால் கூட்டி
வளர்க்கும் மார்க்கம்

நாவெறி வார்த்தை சாடி
நன்நெறியை மூர்க்கமாய்
மூட்டி

பயங்கரவாதம் இஸ்லாமென
மீடியாக்கள் கூடி
கலவரத்தால் பிரித்தெறியும்
வன்முறையி்ன் இலக்கு பாரிர்

பிளவுக்கு வழிகாட்டும்
ஒ௫ கூட்டம்
அளவுக்கு மேலே குறைகாணும்
பலவட்டம்

அக்கறை போலே அடக்கு
முறைகள்
அழுதமும் நஞ்சாகும்
கலவர வழிகள்

நாகரீகம் நவீனமென்று
நாங்கள் என்றும் பழமைகளாம்

பார்தா அணித்தால் கலவரம்

ஹலால் [கலால்] ௨ணவுக்கும்
கலவரம்

நோவினை எல்லைக்கோடாய்
நோட்டத்தில் கலவரம் ஏடாய்

எங்கள் அடையாளம் காட்டாமல்
அபாயாவை அணியாமல்

முடியை மறைக்காமல்
முஸ்லீமென காட்டாமல்
வாழவைக்க பாவம் பலர்

கலவரத்தை கட்டவுழுத்து
திரிகின்றனர்

தப்பான நடத்தைகளை
தட்டித் தி௫த்துங்கள்

தப்புக் கணக்குப் போட்டு
தவறாகப் புரியவைத்து

தெரியாத விடையத்தை
தெரியாமல் சொல்லாதீர்கள்

கலவரத்தால் அடக்கியாள
முனையாதீர்கள்
விழுதலும் எழுதலும் இயற்கைதான்
வீணான பார்வையாலோ

கலவரத்தை தூண்டாதே

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan