மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

இரா.விஜயகௌரி

சித்திரமே நீ
செயல் கொள்வாயா……………

சித்திரப்பதுமையாய் எந்தன்
சிந்தையுள் புகுந்து கொண்டாய்
பைந்தமிழ் உரையுள் என்னை
பகடையாய் உருட்ட வந்தாய்

என் தமிழ் அணங்கே உன்போல்
பெண்தனை உளத்தில் கொள்வேன்
தலைமையில் உன்னைத் தாங்க-என்
ஆயுளில் இடமே. இல்லை

உணர்வினுள் உயிரினுள் வேள்வியுள்
யாகத்தின் ஆகுதி ஆகி நின்ற
அத்தனை உயிர்ப்பின். நிறைவும் உன்
சதிதனில் சரிந்து. போமோ

வெந்தணல் சுமந்தோர் இன்றும்
வேகித்தம் வாழ்வைக் கடக்க -ஏன்
இத்தனை. போலி நிறைத்துன்
கபட நாடக முகத்திரைகள்

இன்னமும் நம்பி வீழ மூடரா நாமும்
இழந்தவர் கை தொடுத்து- அவர்
இதயத்தின் வடு களைந்து. -நாம்
தாய் நிலத்தின் வளத்தைக் காப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading