சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

இரா.விஜயகௌரி

சித்திரமே நீ
செயல் கொள்வாயா……………

சித்திரப்பதுமையாய் எந்தன்
சிந்தையுள் புகுந்து கொண்டாய்
பைந்தமிழ் உரையுள் என்னை
பகடையாய் உருட்ட வந்தாய்

என் தமிழ் அணங்கே உன்போல்
பெண்தனை உளத்தில் கொள்வேன்
தலைமையில் உன்னைத் தாங்க-என்
ஆயுளில் இடமே. இல்லை

உணர்வினுள் உயிரினுள் வேள்வியுள்
யாகத்தின் ஆகுதி ஆகி நின்ற
அத்தனை உயிர்ப்பின். நிறைவும் உன்
சதிதனில் சரிந்து. போமோ

வெந்தணல் சுமந்தோர் இன்றும்
வேகித்தம் வாழ்வைக் கடக்க -ஏன்
இத்தனை. போலி நிறைத்துன்
கபட நாடக முகத்திரைகள்

இன்னமும் நம்பி வீழ மூடரா நாமும்
இழந்தவர் கை தொடுத்து- அவர்
இதயத்தின் வடு களைந்து. -நாம்
தாய் நிலத்தின் வளத்தைக் காப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading