பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும்
சந்திப்பு வாரம்-247

சிரிப்பு
….
வான்முகில்கள் மோதலிலே
வெடிச்சிரிப்பு – இரு
வல்லரசுகள் மோதலிலே -ஏவு
கணைச் சிரிப்பு!

தேன்இதழ்கள் மோதலிலே
காதல் சிரிப்பு-அந்த
இயற்கைமகள் பார்வையிலே
அழகின் சிரிப்பு!

கருங்குயில்கள்வாய் திறந்தால்
இசைச்சிரிப்பு-மொட்டு
மலர்விரிப்பில் தோன்றுவதோ
பூஞ்சிரிப்பு!

மழலையர் புன்னகையில்
மலர்வதோ-அந்த
மாயவனாம் எம்கடவுள்
கண்ணனின் சிரிப்பு!

என்மகன் கவிதனின்
குரலோசையிலோ – திரு
வள்ளுவரின் வாய்மொழியாம் தமிழமுதக்குறள் சிரிப்பு!

சந்தேகப்பேர்வழிகள்
உதட்டினிலே எப்பொழுதும்-தோன்றும்காண்
அகந்தையெனும் ஆணவச் சிரிப்பு!

தேசியத் தலைவரை
நேசிப்பவர் முகத்தினிலே – மலரும்
அன்பின் உருவான
தாயின் சிரிப்பு!

எங்கள் மக்கள் ஒருங்கிணைப்பில்
விடியும் பார்-ஈழ
தேசத்தின் விடுதலைச் சிரிப்பு!

தேன்இதழ்கள் மோதலிலே
காதல் சிரிப்பு-அந்த
இயற்கைமகள் பார்வையிலே
அழகின் சிரிப்பு!

அபிராமி கவிதாசன்
02.01.2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading