” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நேவிஸ் பிலிப்

04/01/24 கவி இல (116)
உலகின் நிலை மாற என்ன கொண்டு வருகிறாய்,?

வருடம் தோறும்
வந்து போகும் புத்தாண்டே வருக
முன்னாண்டு போலன்றி இவ்வாண்டை
வளமான ஆண்டாக மாற்றி விடு

புதிய ஆண்டதன் பிறந்த நாளிலே
பதிய உறவிலே மகிழ்ந்து வாழவே
உறவின் கரங்களாய் ஒன்று கூடவே
உரிமைகள் பெற்று மகிழ்ந்து வாழவே

மனித நேயம் மண்ணில் மலரவே
புனிதம் மனிதன் மனதில் வளரவே
அன்பின்பாதையில் பயணமாகவே
பாரினில் சாட்சியாய் கூடி வாழவே

வெற்றிகள் முழு மதியாய்
தோல்விகள் தேய் பிறையாய்
பூத்துக் குலுங்கும் தாரகையாய்
முயற்சிகள் அனைத்தையும் முளைக்க விடு

உன்னொளியால் நாநிலம் ஒளிர விடு
தீமைகளை எரித்து விடு
அக வாழ்வின் தூய்மையிலே
நம்பிக்கை வளர்த்து விடு
இறை ஆசிஅருள் பெருக
அருளும் பொருளும் கொண்டு
நலமாக வாழவிடு புத்தாண்டே,,,,,,
நன்றி வணக்கம்…….

Nada Mohan
Author: Nada Mohan