அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Raani sampanthar

11.01.24
கவி இலக்கம் -298
மனிதா நீ விழித்தெழு

எழும்போது நீ விழுகின்றாய்
விழும்போது எழுகிறாய்
நீந்தும் நினைவுகளோ
கனவுகளுடன் கண்ணீரில்

விழுபவனைத் தூக்கி நிறுத்த
கை கொடுக்க மறுப்பவன்
விழுந்து விழுந்து சிரிக்கிறான்
கிறுக்குப் பிடித்தவன் போல்

சுத்தமில்லாக் கண்கள் குளிர
நல்ல மன மாந்தர் சந்திக்குமா
பற்றிப் பற்றி எரியும் வயிறு
வத்திப் பெட்டியை சிந்திக்குமா

விழித்தெழு மனிதா விழித்தெழு
வாழ்வுக்காலம் மிகக் குறுகியதே
கோலம் மாறி அலங்கோலமாய்
மாற முதலே நீ மாறிடு மனிதா .

Nada Mohan
Author: Nada Mohan