சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

உலகின் நிலை மாற என்னென்ன கொண்டுவருகிறாய்!

சிவதர்சனி இராகவன்

உலகின் நிலை மாற
என்னென்ன கொண்டுவருகிறாய்..

வியாழன் கவி 1918..
நிலைகொண்ட புவிமீது
நிறைவாகப் பிறந்தவளே
விலையற்ற உயிர்க்காக
விருதென்ன கொண்டு நீ
விரைந்தே வருகிறாய்…!

புதிதான உன்வரவால்
நம் பரிதாபம் போயிடுமோ
தினந்தோறும் அழிவுகளும்
திசைமாறிய மனங்களும்
விசையான படகெனவே
இதை மாற்ற வருவாயோ..!

அன்பென்ற ஒரு குடைக்குள்
அணைத்தெம்மை ஆள்வாயோ
இன்னும் எதிர்பார்ப்பை
ஏமாற்றம் ஆக்குவாயோ
எள்ளளவு சுகமதையும்
எமக்கீய வருவாயோ..!
சிவதர்சனி இராகவன்
11/1/2024

Nada Mohan
Author: Nada Mohan