அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

உலகின் நிலை மாற என்னென்ன கொண்டுவருகிறாய்!

சிவதர்சனி இராகவன்

உலகின் நிலை மாற
என்னென்ன கொண்டுவருகிறாய்..

வியாழன் கவி 1918..
நிலைகொண்ட புவிமீது
நிறைவாகப் பிறந்தவளே
விலையற்ற உயிர்க்காக
விருதென்ன கொண்டு நீ
விரைந்தே வருகிறாய்…!

புதிதான உன்வரவால்
நம் பரிதாபம் போயிடுமோ
தினந்தோறும் அழிவுகளும்
திசைமாறிய மனங்களும்
விசையான படகெனவே
இதை மாற்ற வருவாயோ..!

அன்பென்ற ஒரு குடைக்குள்
அணைத்தெம்மை ஆள்வாயோ
இன்னும் எதிர்பார்ப்பை
ஏமாற்றம் ஆக்குவாயோ
எள்ளளவு சுகமதையும்
எமக்கீய வருவாயோ..!
சிவதர்சனி இராகவன்
11/1/2024

Nada Mohan
Author: Nada Mohan