சிவதர்சனி இரா

வியாழன் கவிதை 1922!

நோக்கடா மானிடா…!

நோக்கம் கொண்ட மனிதா
நீ நோக்கிட எத்தனை விதமாய்
தேக்கிட எண்ணு தினமும்
ஆக்கிடும் அதனுள் பலதே..

வாக்கினைத் தருவாரும்
உளரே – வல்லவை
ஊக்கிட உதவுவாரும் சிலரே
ஏக்கமும் மெல்ல விலக்கு
ஏந்திட வேண்டுமே உழைப்பு..

பூத்திடும் நொடிகள் விரைவாய்
புனைந்திடு கனவினை உன்
நனவென யாவும் மாறும்
புவனமும் உன்னைப் போற்றும்..

உனக்கென இருப்பது உனது
அதைத் திருடிட யாரால்
இயலும்?- ஒரு நாள் உனக்கது
மெல்லவே புரியும் மானிடா…!
சிவதர்சனி இராகவன்
25/1/2024

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading