” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

25.01.24
ஆக்கம்-300
தழும்புகள்

தொடத் தொட ஆசையோ ஆசை
சூடும் மலரில் மூடி வைச்ச அழகு
வாடும் இதழில் தொட்ட போது
குத்திய முள்ளின் வலி மாறாத்
தழும்பு

அன்னை மடி தூங்கிய குழந்தை
பசி பட்டினியால் உண்ணாத
தாயில் பால் சுரக்காத மார்பில்
கடித்த தழும்பு படித்துப் பட்டம்
பெற்றதும் சந்தோஷத் தழும்பானது

இல்லறத்தில் நல்லறம் தேடும்
கணவன் ,மனைவியில் தினந்தினம்
தேயும் இளமை முதுமை நாடத்
தேளாய்க் கொட்டிய தழும்பானது

மண்ணீரில் புதைய கண்ணீரில்
காலம் நனையத் தன்னுடனே
வந்த பொன்னுடலில் அணைத்து
இருந்த மாலையில் தொடுத்து
இணைந்த பூக்களில் எத்தனை
தழும்புகளென எண்ணி வாடியது .

Nada Mohan
Author: Nada Mohan