பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 253
13/02/2024 செவ்வாய்
“பிள்ளைக்கனியமுது”
——————————
அம்மி மிதித்து, அருந்ததி காட்டி,
அடுத்தடுத்து வருடமும் போக்கி,
அம்மா எனவழைக்கும் அப்பேறு,
ஆகவில்லை என்று பெரும்கீறு!

சாதகம், சாத்திரம் பார்த்தோம்!
சாமியை வேண்டி நோற்றோம்!
பாதகம் ஏற்படாது பார்த்தோம்!
பாவ விமோசனம் செய்தோம்!

பிரபல வைத்தியம் நாடினோம்!
பிறபல சோதனை செய்தோம்!
இரவில் உறங்காது உழன்றோம்!
இறைவன் முறையீடு செய்தோம்!

ஆண்டுகள் நகர்ந்தன ஐந்தாய்!
அனல்மேல் இட்ட இரும்பாய்!
பாடுகள் பட்டோம் இருவராய்!
பாவங்கள் அறியாத பாவிகளாய்!

ஆண்டுகள் ஆறு உருண்டோடின!
ஆண்டவன் கண்களும் விழித்தன!
ஆண்மக வொனறு பரிசளித்தான்!
அவனே முதற்கனி எமக்கானான்!

நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading