” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சர்வேஸ்வரி சிவருபன்

காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய்..!

காற்றாலையசைகின்றது
காணங்கள் இசைக்கின்றது

காலத்தால் அழியாத சரிதைகளும் துலங்குகின்றது

உடனுக்குடன் உரிமையுடன்
உணர்வலையை மீட்டுகின்றாய்

உன்னதத் தொகுப்புக்களை பரப்பவும் வருகிறதே

காதினிலே கேட்டாலும்
கனிந்திடுமே மனமென்றும்

காசினியெங்குமே விரிந்தும் பரந்தும்
நின்றிசைக்குமே

சோம்பலையும் அகற்றுகின்றாய்
கவலைகளையும் தீர்த்தும் நிற்க்கின்றாயே

சோலைவனத்து வண்டினம்போல் ரீங்காரம் இடுகின்றாய்

தொழில் நுற்பச் சாதனையில் நீயுமோர்
தோழமையே

தேடியுன்னை வைத்திருந்தால்
நாளும்சேய்தி சொல்லிடுவாய்

காற்றின் வழி மொழியாளே வாழ்வினிக்க நின்றாயடி

கவிஞர்
சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan